Saturday, September 19, 2015

En karam pidithu enai nadathu

என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து
வருவாய் இயேசுவே வழி துணையே
என் வாழ்கை பயணம் முழுவதுமே
என் கரம் பிடித்து எனை நடத்து

1. இருளின் ஆட்சி தொடங்கிவிட
என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)
என்னுடன் நீயும் இல்லாமல்
வேறு எங்கோ போவது சரிதானா?
எங்கோ போவது சரிதானா?
என் கரம் பிடித்து எனை நடத்து

2. என்னுடன் நீயும் நடந்து வந்தால்
இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
என்னுடன் நீயும் இல்லையென்றால்
என் உலகே இருளில் மூழ்கி விடும்
உலகே இருளில் மூழ்கி விடும்
என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து

No comments: