Saturday, September 19, 2015

ANBE ANBE ANBE AARUYIR

அன்பே ! அன்பே ! அன்பே !
ஆருயிர் உறவே
ஆனந்தம் ! ஆனந்தமே !

சரணங்கள்

1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம்தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா --- அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
நரலோகரி லன்பேனையா ?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ --- அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே --- அன்பே

4. பூலோகத்தின் பொருளில் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா --- அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமொ --- அன்பே

No comments: