Saturday, September 19, 2015

ANBULLA YESAIAH

அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

No comments: