Saturday, September 19, 2015

ARUPPU MIGUTHI RAAJAVE ULIYAM

1. அறுப்பு மிகுதி ராஜாவே
ஊழியர் தந்திடும்
வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்

பல்லவி

இந்தியாவில் கோடி கோடி
உம்மை அறியாரே
என்னை அனுப்பும் ராஜாவே
நீர் என்னை அனுப்பிடும்
2. பாதாள சேனை இன்னும் இன்னும்
ஜெயிக்க விடாதிரும்?
சேனை வீரராய் வாலிபர் பலர்
எழும்பச் செய்திடும்

3. யாரை அனுப்ப யார் போவார்
என்றலையும் இயேசுவே
என்னை உந்தன் கண்கள் காண
உம்முன் நிற்கிறேன்

4. மெய் வீரனாக ராஜாவே
நான் எழுந்து வருகிறேன்
கோதுமை மணியாக மாற
என்னைப் படைக்கிறேன்

No comments: