Friday, August 28, 2015

SUNDHARA PARAMA DEVA MAINTHAN YESU KRISTHUVUKKU

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி --- சுந்தர

சரணங்கள்

1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் - பவத்துயர்
போடுங்கள் - ஜெயத்தைக் கொண்
டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் --- சுந்தர

2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட - அவர் பதம்
தேடிட - வெகு திரள்
கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் --- சுந்தர

3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து - வாழ, தீயோன்
பயந்து - தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் --- சுந்தர

No comments: