Friday, August 28, 2015

SAMATHANAM OOTHUM YESUKRISTHU

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

சரணங்கள்

1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம்

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம்

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

No comments: