Friday, August 28, 2015

SER IYYA ELIYEN SEI PAVAVINAI

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, - எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் - பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? - எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, - உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே - எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் - தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; - எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், - அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; - எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த - யேசு
தேவனே, கருணாகரனே - எனைச்

No comments: