Friday, August 28, 2015

NANDRI SOLLIDA VENDUM

நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்
நன்மை செய்ததினாலே (2)
நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்

உண்மை பேசிட வேண்டும் உயர்வை அடைவதற்கு
உதவி செய்திட வேண்டும் தினம் கஷ்டப்படுபவர்க்கு
அன்பு செலுத்திட வேண்டும் என்றும் அயலவர்க்கு
நன்மை செய்திட வேண்டும் ஏழை எளியவர்க்கு

தூய்மை நீ அடைய வேண்டும் தூய வாழ்விற்கு
தீமை அகற்ற வேண்டும் திருந்தி வாழ்வதற்கு
மாசு நீக்கிட வேண்டும் நல்லவராவதற்கு
நெஞ்சில் இயேசு இல்லையென்றால் வாழ்வு என்னத்திற்கு

No comments: