Monday, August 31, 2015

SATHAM KETTU SITHAM SEYYA ALAIKIRARE

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே --- இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ ஆ ஆ
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் --- சத்தம்

2. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ
தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? --- சத்தம்

3. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ
உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப்போல கரைந்திடுவோம்
மெழுகைப் போல உருகிடுவோம் --- சத்தம்

4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ
வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் --- சத்தம்

No comments: