Monday, August 31, 2015

KIRUBAI VENDUM NAADHA YESUVE LYRICS

கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது --- கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின --- கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின --- கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின --- கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே --- கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் --- கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட --- கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் --- கிருபை

No comments: