இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) - நீ
சரணங்கள்
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?
இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?
No comments:
Post a Comment