Monday, August 31, 2015

AANIGAL PAINTHA KARANGALAI VIRITHE

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் --- ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் --- ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் --- ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் --- ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே --- ஆணிகள்

No comments: