Monday, August 31, 2015

paadiye paranai thuthi maname

பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே - (2)

சரணங்கள்

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே --- பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே --- பாடியே

No comments: