Sunday, August 16, 2015

POTRIDU AANMAME SRISTI KARTHAVAAM

1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும்.

2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்; யாவும் அவர் அருள் ஈவாம்.

3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை;
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை;
பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்;
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி மகிழ்வாய் ஆமேன்.

No comments: