Sunday, August 16, 2015

PILAUNDA MAALAIYE PUGALIDAM YEEYUME

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

No comments: