Sunday, August 16, 2015

PAAR POTRUM VENTHAN PAARINIL VANTHU

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

No comments: