Sunday, August 16, 2015

INTHA NAALAI NAAN SAMARPIPPEN

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

No comments: