Sunday, August 16, 2015

PAALARE OOR NESAR UNDU VINN MOTCHA VEETILE

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்.

2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே;
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ!

3. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டில், நீர்
நல் மீட்பரின் பேரன்பால் பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்.

4. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை;
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை.

No comments: