Sunday, April 13, 2025

Yesu Ratchagar Peyarai இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

 இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே

வாடி கிடந்த உயிர்களெல்லாம்
வாழ வைத்தாரே
அவர் வாழ்வு சத்தியம் ஜீவனுமாய்
நன்மை செய்தாரே

பரம பிதா ஒருவன் என்று வகுத்து
சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு
உலகை கண்டவர் இயேசு

எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை
வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக
விளங்குகின்றவர் இயேசு

தீமை வளரும் எண்ணம் தன்னை
அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு
பழகச் சொன்னவர் இயேசு

No comments: