Sunday, April 13, 2025

Yesaiya Um Naamam இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

 இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்

உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா

எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்

பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்

இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா

மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

No comments: