Sunday, April 13, 2025

Vinnaga Thalaivanukku விண்ணகத் தலைவனுக்கு

 விண்ணகத் தலைவனுக்கு

மண்ணிணில் ஆராதனை
விண்ணிலும் ஆராதனை

மண்ணினில் மனுஷனை உருவமைத்து
ஜீவ சுவாசம் ஊதிவிட்டு
தனிமையில் இருந்த மனுஷனை நினைத்து
ஏற்றதுணை கொடுத்து மகிழ்ந்தவரை

ஏதேனில் தொடங்கிய பாவத்தினை
கொல்கொதா மலையில் முடித்துவைத்து
தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள்
சீயோனில் பாடி மகிழவைத்த

மீண்டுமாய் வருவேன் என்றுரைத்த
பரிசுத்த ஆவியால் எமை நிறைத்து
தூதருடன் வரும் தெய்வத்தையே
காத்து நிற்ப்போம் வழி பார்த்து நிற்போம்

ஆவியின் கனியை எமக்கு தந்து
ஆத்தும பாரத்தை எமக்குள் வைத்த
ஆண்டவர் இயேசுவின் அன்பினை சொல்லி
ஆத்தும அறுவடை செய்திடுவோம்

No comments: