பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
சரணங்கள்
1. நமதாதி பிதாவின் திருப் பாலர் இவர்
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் - சமா
2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நம தாயர் இவர் - சமா
3.ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார்; சொந்தமாய் - சமா
4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே ஆயரும் கூடவே - சமா
5.மெய்யாகவே மேசியாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே - சமா
No comments:
Post a Comment