ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் (2) (ஒரு ராஜா)
அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல (கல்யாண வஸ்திரம்)
வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் (இரட்சிப்பு என்றொரு)
No comments:
Post a Comment