Wednesday, May 8, 2024

NAAN PAAVI THAN AANALUM NEER நான் பாவி தான் -ஆனாலும் நீர்


1.நான் பாவி தான் ,- ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர் ;
என் மீட்பரே வந்தேன் .

2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே 
கறை பிடித்து கெட்டேனே ;
என் கறை நீங்க இப்போதே ,
என் மீட்பரே வந்தேன் .

3.நான் பாவி தான்- மா பயத்தால் 
திகைத்து பாவ பாரத்தால் 
அமிழ்ந்து மாண்டு போவதால் 
என் மீட்பரே வந்தேன் .

4.நான் பாவி தான் ,- மெய்யாயினும்
சீர், நேர்மை , செல்வம், மோட்சமும் 
அடைவதற்கு உம்மிடம் 
என் மீட்பரே வந்தேன் .

5. நான் பாவி தான் ,-இரங்குவீர் ,
அணைத்து, காத்து , ரட்சிப்பீர் ,
அருளாம் செல்வம் அளிப்பீர் ,
என் மீட்பரே வந்தேன் .

6.நான் பாவி தான் -அன்பாக நீர் 
நீங்கா தடைகள் நீக்கினீர் ;
உமக்கு சொந்தம் ஆக்கினீர் ;
என் மீட்பரே வந்தேன் .
மாண்டு 

No comments: