சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல போர்க்கும் அதபிமானி
உத்தம ஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும்
வாலிபர் தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்
சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்
புலைமேவிய மானிடரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்
கதியின் வழி காணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப்
போகும் பயணத்துணையும் அது
சகல போர்க்கும் அதபிமானி
உத்தம ஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும்
வாலிபர் தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்
சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்
புலைமேவிய மானிடரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்
கதியின் வழி காணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப்
போகும் பயணத்துணையும் அது
No comments:
Post a Comment