Thursday, November 14, 2019

YEN MEL NENAIVAI IRUPPAVARE

என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே-2

கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு

அழிந்து கொண்டிருந்த 
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே

உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்

எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே

உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்

No comments: