Thursday, November 14, 2019

KARTHTHAR VEETAIK KATTAARAAKIL

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் 
அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா
கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் 
உன் கண்விழிப்பும் விருதா
ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்
நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்து
அவர் வழி நடந்தால்
நீ பாக்கியம் கண்டடைவாய்

1.உன் வழிகளிளெல்லாம் உன்னைத் 
தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில்
இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார்

2.இரவின் பயங்கரத்துக்கும் 
பகலில் பறக்கும் அம்புக்கும் 
இருளில் நடமாடும் கொள்ளை நோய்களுக்கும் 
நீ பயப்படவே மாட்டாய்

3.சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் 
மிதிப்பாய் அவர் நாமத்தை நீ
முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்

4.ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும்
வேளையிலும் என்னைத் தப்புவித்தே
முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

5.கர்த்தருக்குப் பயப்பட்டவன்
இவ்வித ஆசீர்வாதம் பெறுவான் 
கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை 
கடைசிமட்டும் ஆசீர்வதிப்பார்

No comments: