கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அதை அறிந்த மரியாளும்
ஆண்டவரிடம் சொன்னாளே
கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அதை அறிந்த மரியாளும்
ஆண்டவரிடம் சொன்னாளே
கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
No comments:
Post a Comment