Thursday, November 14, 2019

JILLENA KULIR KAATTRU VEESUM NERAMADHU

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 

1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் 
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே 
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே 
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே 
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே 
மா ஜோதி மானிடரானார் 
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த 
அவர் அன்பிற்கு இணையில்லையே-2 

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே 
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

No comments: