தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர
பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்
பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே
கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே
நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து
இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்
தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர
பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்
பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே
கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே
நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து
இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்
No comments:
Post a Comment