மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு அது
உனக்கு என்றும் உண்டு
நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே -2
நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை 2
சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு -2
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு அது
உனக்கு என்றும் உண்டு
நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே -2
நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை 2
சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு -2
No comments:
Post a Comment