Monday, November 25, 2019

GUNAPADU PAAVI DEVA

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ 
அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ 

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி 
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத் 
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம் 
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி 

4. உன்னை நீ நம்பாதே! – இவ் 
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

No comments: