Saturday, October 26, 2019

NEER SEIYA NINAITHATHU THADAIPADADHU

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேலைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய

1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய

No comments: