Tuesday, January 22, 2019

YERUSALEM YERUSALEM UNNAI LYRICS


எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்
1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1
2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15
3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3
4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

No comments: