ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
No comments:
Post a Comment