Tuesday, January 22, 2019

KAI THUKI YEDUTHIRIYYA LYRICS


கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
  1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உம்மைப் போற்றுகிறேன்
    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
  2. என் தேவனே தகப்பனே சங்.30:2
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்
  3. மாற்றினீரே அழுகையை சங்.30:11
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகிழ்ச்சியால் உடுத்தினீரே
  4. இரவெல்லாம் அழுகையென்றால் சங்.30:5
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தாயவோ வாழ்நாளெல்லாம்
  5. உம் தயவால் என் பர்வதம் சங்.30:7
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்

No comments: