Monday, April 16, 2018

ENTHAN KANMALAI AANAVARE LYRICS


எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

No comments: