Monday, April 16, 2018

YAKOBE NEE VEAROONDRUVAAI LYRICS

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய்இந்த

என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்

1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோநீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

5. மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்

6. நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்

பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்

No comments: