இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு (3)
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர்
1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு
2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
No comments:
Post a Comment