Monday, August 1, 2016

EN KIRUBAI UNAKKU POTHUM


என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் - சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் - நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் - (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை --- என்

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் - (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு --- என்

No comments: