Monday, August 1, 2016

ANBU KOORUVOM NAM DEVNAGIAH

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

No comments: