1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு
வெட்கப்பட்டுப் போவதில்லை (4)
2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் --- வெட்கப்பட்டு
3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் --- வெட்கப்பட்டு
4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் --- வெட்கப்பட்டு
தடைகள் தகர்ந்து போகும் (4)
ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)
No comments:
Post a Comment