Monday, August 1, 2016

ADHISAYAM SEIVAR DEVAN LYRICS


1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு

வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் --- வெட்கப்பட்டு

3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் --- வெட்கப்பட்டு

4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் --- வெட்கப்பட்டு

தடைகள் தகர்ந்து போகும் (4)

ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

No comments: