Friday, July 29, 2016

NEER SEITHA NANMAIGALAI NINAIKIREN

நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2)

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2)

1. என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) --- நன்றி

2. பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வ‌ந்தீரே (2) --- நன்றி

3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே (2) --- நன்றி

4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா (2) --- நன்றி

No comments: