Friday, July 29, 2016

NEEER NALLAVAR ENBATHIL SANTHEGAMILLAI

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை
கல்லறை திறந்தது உண்மை தான்
உயிருடன் எழுந்ததும் உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்

எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)
உண்மை தானே உண்மை தானே --- நீர்

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)
ஈடற்றவரே, இனையற்றவரே --- நீர்

No comments: