Friday, July 29, 2016

DEVAN NAMAKKU ADAIKALAM

பல்லவி

தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே

சரணங்கள்

1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று

No comments: