Friday, July 29, 2016

NAAN UYIRODUIRUKKUM NAALELLAM

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

என்னை வாழவைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே - (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - (4)
கிருபையான இயேசுவே --- நல்லவர் நீர்

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பறிக்கபட்டீரே என்னை இணைத்திடவே --- உந்தன்

சாபமுள் முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே --- உந்தன்

No comments: