Tuesday, December 15, 2015

Unai Athisaiyam Kana Seiven

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் --- உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே --- உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே --- உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே --- உன்னை

No comments: