Tuesday, December 15, 2015

Aanduku oru murai varugirathu

ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
பிறப்பைக் காணுவோம்

ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்

No comments: