Tuesday, December 15, 2015

Puviel puthumai puribavare

புவியில் புதுமை புரிபவரே
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.

திருமறை போற்றும் போதகரே
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.

இயேசுவின் அரசை வளர்த்திடவே
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.

No comments: