Tuesday, August 25, 2015

NANDRIYAL PAADIDUVOM NALLAVAR YESU

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் --- நன்றியால்

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
மாபெருங்கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார்
இயேசு சுவிசேஷ ஒளியாய் --- நன்றியால்

3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்தரராயிருக்க
கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
விளங்க ஒளி விளங்க --- நன்றியால்

4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத்திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் --- நன்றியால்

5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
இராஜனாய் சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
இயேசுவின் முகமே --- நன்றியால்

No comments: